வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - தொழுகையில் உமிழ்நீரை விழுங்குதல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
தொழுகையில் உமிழ்நீரை விழுங்குதல்
கேள்வி: தொழுகையில் இருக்கும்போது உமிழ்நீர் சுரந்தால் அதை விழுங்கலாமா? விளக்கம் தரவும்.
பதில்: தொழும்போது வாயில் சுரக்கும் உமிழ்நீரை விழுங்குவதில் தவறில்லை. தொழுகையில் இருக்கும் போது வேண்டுமென்றே உண்பதும் பருகுவதுமே தொழுகையை முறிக்கும். இமாம் இப்னுல் முன்திர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: பர்ளான தொழுகையில் வேண்டுமென்றே உண்பவரினதோ அல்லது பருகியவரினதோ தொழுகை முறிந்து விடும்;. அவர் அத்தொழுகையை மீட்டி நிறைவேற்ற வேண்டும் என்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவாகும். ஸுன்னத்தான தொழுகையைப் பொறுத்த வரையில், அதிலும் இச்சட்டமே செல்லுபடியாகும்;. ஏனெனில், 'பர்ளை முறிக்கக்கூடியது ஸுன்னத்தானதையும் முறிக்கும் என்பது பெரும்பாலான உலமாக்களின் அபிப்பிராயமாகும்.
