வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - தொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
தொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்
கேள்வி : தொழுகையின் ஸுஜுதில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமென்று கூறப்படுகின்றது. எனவே 'றப்பி ஸித்னீ இல்மா' போன்ற துஆக்களை ஓதலாமா?
பதில் : ஸுஜுதில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளை அல்லாஹ்விடம் கேட்கலாம். அது 'முஸ்தஹப் வரவேற்கத்தக்கதாகும். இதற்கு கீழ்வரும் நபி மொழி ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. 'உங்களில் ஒருவர் ஸுஜுதில் இருக்கும் நிலையில்தான், தனது இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். எனவே, அதில் பிரார்த்தனைகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்' (ஆதாரம்-முஸ்லிம்) நபியவர்கள் ஸுஜுதில் ஓதிய துஆக்கள், பல ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நாமும் அவற்றை ஓதுவதே சாலச் சிறந்ததாகும்.
