வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - அகீகா
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
அகீகா
கேள்வி: அகீகா கொடுப்பது யார் மீது கடமையாகின்றது? அகீகா கொடுக்க வசதியுண்டா இல்லையா என்பதை எவ்வாறு நிர்ணயிக்கலாம்? தனது பெற்றோர் தனக்காக அகீகா கொடுக்கவில்லையென்பதைத் தெரிந்து கொள்ளும் பிள்ளை, தனக்காகத் தானே அகீகா கொடுக்க வேண்டுமா? தனது மனைவியின் பெற்றோர் அவளுக்காக அகீகா கொடுக்கவில்லை என்பதைக் கணவன் தெரிந்து கொண்டால் தனது மனைவிக்காக அவன் அகீகா கொடுக்க வேண்டுமென இஸ்லாம் கட்டாயப்படுத்துகின்றதா?
பதில்: அகீகா கொடுப்பது ஸுன்னா முஅக்கதாவே (பலவந்தமான சுன்னத்தே) அன்றி வாஜிப் அல்ல. குழந்தையின் தந்தை வசதிபடைத்தவராக இருப்பினும், வசதியற்றவராக இருப்பினும் அவர் தனது குழந்தைக்காக அகீகா கொடுப்பது ஸுன்னத்தாகும். தனது பெற்றோர் தனக்காக அகீகா கொடுக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளும் பிள்ளை, தனக்காகத்தானே அகீகா கொடுக்க வேண்டுமெனும் விடயத்தில் கருத்து வேறுபாடுண்டு. இமாம் நவவி தனது 'றெளளத்துத் தாலிபீன்' எனும் நூலில் இவ்விடயம் பிள்ளையின் தெரிவுக்கு விடப்பட்டவொன்றாகும் என்றும், அவன் விரும்பியபடி கொடுக்கவோ, கொடுக்காமலிருக்கவோ முடியுமென்றும் கூறுகின்றார். அதாஃ, ஹஸனுல் பஸரி ஆகிய தாபிஈன்கள் கொடுப்பதே சிறந்தது எனக் கருதுகின்றனர். இமாம் இப்னு குதாமா, அகீகா கொடுப்பது தந்தையின் பொறுப்பேயன்றி பிள்ளையின் பொறுப்பல்ல எனக் குறிப்பிடுகின்றார்.
அகீகா கொடுக்கப்படாத தனது மனைவிக்காக அதனைக் கொடுக்க வேண்டிய கடமை கணவனுக்கு இல்லை.
