கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை. - ரெஜிஸ்ட்ரேஷனும், நிகாஹும்
Last Updated (Sunday, 02 November 2008 07:13) Thursday, 30 October 2008 08:56
ரெஜிஸ்ட்ரேஷனும், நிகாஹும்
கேள்வி: ரெஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்ட தம்பதிகள் திருமண வைபவத்திற்கு முன் திருமண தம்பதிகள் போன்று வாழ முடியுமா? அவர்களது ரெஜிஸ்ட்ரேஷன் தினத்தன்றே சொல்லப்பட்ட 'ஈஜாப், கபூல்' என்பதற்கான தீர்ப்பு என்ன?
பதில்: 'ஈஜாப்,கபூல்' நிகழ்வதற்கு முன்னர் நீங்கள் குறிப்பிடும் ரெஜிஸ்ட்ரேஷனை மாத்திரம் செய்து கொண்ட தம்பதி திருமணத்தம்பதிகள் போன்று பழக முடியாது. ஆனால், ரெஜிஸ்ட்ரேஷனுடன் 'ஈஜாப், கபூல்' நிகழ்ந்திருப்பின் குறித்த தம்பதிகளுக்கு கணவன், மனைவியாக வாழ்வதற்குப் பூரண அனுமதியுண்டு. இஸ்லாத்தில் திருமணம் என்பது ஈஜாப், கபூலையே குறிக்கும். திருமணம் நிறைவேற நீங்கள் கூறும் திருமண வைபவம் நடைபெற வேண்டியதில்லை. அவ்வாறே குறித்த ரெஜிஸ்ட்ரேஷன் அரசாங்கத்தின் தேவைக்கான ஒரு பதிவேயன்றி அது இஸ்லாமிய திருமணத்துடன் தொடர்பான ஒன்றல்ல.
ஒருவர் தான் திருமணமாகவிருக்கும் பெண்ணுடன் ஈஜாப், கபூல் நிகழ்வதற்கு முன்னர் தனிமையிலிருப்பதும் கூடிப் பழகுவதும் ஹராமாகுமென்பது குறிப்பிடதக்கது.
