கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை. - செல்லுபடியற்ற வஸீய்யத்
Last Updated (Sunday, 02 November 2008 07:13) Thursday, 30 October 2008 08:56
செல்லுபடியற்ற வஸீய்யத்
கேள்வி: ஒருவர் தான் வபாத்தாக முன்னர் தன் மனைவியிடம் 'இத்தா' இருக்க வேண்டாம் என்று 'வஸிய்யத்' செய்திருந்தால் அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா?
பதில் : கணவனின் மரணத்தை தொடர்ந்து மனைவி நான்கு மாதங்களும் பத்து நாட்களும்'இத்தா அனுஷ்டிக்க வேண்டும் என்பது இறை கட்டளையாகும். இதை யாவரும் அறிவர். இத்தகைய ஒரு சன்மார்க்கக் கடமையை விட்டுவிடுமாறு வஸிய்யத் செய்வதோ அலலது பணிப்பதோ பாவமானதாக அமைவதுடன், செல்லுபடியற்றதுமாகும். இது போன்ற வஸிய்யத்துக்களையோ வேண்டுகோள்களையோ நிறைவேற்றுவது கூடாது.
'அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் சிருஷ்டிகளுக்குக் கட்டுப்படலாகாது' என்பது ஹதீஸாகும்.
பாவமான காரியங்களைச் செய்யுமாறு தலைவரோ கணவரோ அல்லது பெற்றோரோ தூண்டினால், அவர்களுக்குக் கட்டுப்படலாகாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்தகைய கட்டளைகளுக்கு மாறு செய்வது கடமையாகி விடுகின்றது
