Sheikhagar.org - Official site for sheikhagar
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அறபுக் கலாசாலைகளின் பங்கு
Created On: Monday, 15 April 2013 15:34

இன்றைய உலகின் பொருளாதாரப் பிரச்சினை உட்பட எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னால் இருப்பது பண்பாட்டு வீழ்ச்சியாகும். இந்த உண்மை விளங்கப்படல் வேண்டும். இன்று உலகிற்கு பொதுவாகவும் எமது தேசத்துக்கு குறிப்பாகவும் தேவைப்படுவது ஆன்மீக, ஒழுக்க, பண்பாட்டு ரீதியிலான வழிகாட்டல்களாகும்.
பிரபல பிரான்சிய இலக்கியவாதி வோல்டயர் (Voltaire) என்பவர் இவ்வாறு சொல்கிறார்:- 'ஏன் இறைவனைப் பற்றிய சந்தேகத்தைக் கிளப்புகிறீர்கள். இறைவன் இல்லை என்ற நிலை வந்துவிட்டால், எனது மனைவி எனக்கு துரோகம் செய்வாள். எனது வீட்டுப் பணியாள் எனது சொத்து செல்வங்களைத் திருடி விடுவான். இறைவன் இருக்கின்றான் என்ற பயம்தான் எனது மனைவி எனக்கு விசுவாசமாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. இறைவன் இருக்கின்றான் என்ற பயம்தான் எனது பணியாள் எனக்கு நம்பிக்கையோடு நடந்து கொள்வதற்கு காரணமாக இருக்கின்றது'
பிரபலமான தத்துவமேதை இமானுவல் கான்ட் (Immanuel Kant)என்பவர் தெரிவிக்கும் கருத்தும் இங்கே நோக்கத்தக்கது. மூன்று நம்பிக்கைகள் உலகில் இல்லாத நிலையில் மனிதனிடத்தில் நம்பிக்கை, நாணயம், நேர்மை, நல்ல பண்பாடு என்பவற்றை எதிர்பார்க்க முடியாது. அதில் ஒன்று இறைவன் இருக்கிறான் என்பது. மற்றது ஆன்மா நிலையானதுளூ அது அழியாது என்ற நம்பிக்கை. மூன்றாவது மரணத்துக்குப் பிறகு விசாரணை இருக்கிறது என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கைகள்தான் உலகில் பண்பாட்டைப் பாதுகாக்கிறன. இவை இல்லாத இடத்தில் பண்பாட்டை எதிர்பார்க்க முடியாது என்கிறார்.
பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த நீதிபதி டெனிங் (Denning)என்பவரின் கருத்தையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
'மதம் இல்லாத இடத்தில் பண்பாடு இருக்காது. பண்பாடு இல்லாத இடத்திலே சட்டமும் ஒழுங்கும் காணப்படாது' எனக் கூறியுள்ளார்.
இங்குதான் அரபுக் கலாசாலைகளினதும் அறநெறிப் பாடசாலைகளினதும் வகிபாகம் உணரப்படுகின்றது. பொதுவாக கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றினதும் குறிப்பாக இஸ்லாமிய அரபுக் கலாசாலைகளினதும் பங்களிப்பு மனித இன வரலாற்றில் உலகில் என்றுமில்லாதவாறு இன்று தேவைப்படுகின்றது. ஆன்மீகத்தையும், பண்பாட்டையும் விதைக்கின்ற இடங்களாக இவைதான் காணப்படுகின்றன.
பண்பாடுள்ள, ஒரு சமூகத்தைக் கொண்ட தேசத்தை நிர்மாணிப்பதற்கு அரபுக் கலாசாலைகளினால் சிறந்த பங்களிப்பை செய்ய முடியும். இலங்கை போன்ற பல்லின மக்களும், பல சமயத்தவர்களும் வாழ்கின்ற ஒரு நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பன இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
இந்த நாட்டிலிருக்கின்ற அரபுக் கலாசாலைகளின் தார்மீக கடப்பாடு நல்லொழுக்கமும் பண்பாடும் உள்ள ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்றைய அரபுக் கலாசாலைகள் இன்றிருக்கின்ற நிலையைவிட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு கூடிய பங்களிப்பை வழங்க வேண்டும். இது காலத்தின் தேவை. அதேபோன்று முஸ்லிம் - முஸ்லிமல்லாதோர் உறவு, சமூக நல்லிணக்கம் என்பன பற்றிய இஸ்லாத்தினுடைய நோக்கு குறித்து விளக்கும் தெளிவான கலைத்திட்டத்தை அரபுக் கலாசாலைகள் உள்வாங்க வேண்டும்.
அதேபோன்று அரபுக் கலாசாலைகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய மற்றொரு அம்சம் இருக்கிறது. அதுதான் சிறுபான்மையினருக்கான சட்ட ஒழுங்கு என்ற பாடத்தை அரபுக் கலாசாலைளில் போதிக்கின்ற நிலை உருவாக வேண்டும் என்பது. இது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கும், கருத்தரங்குகள், பயிற்சி நெறிகள், பாட நெறிகள், விரிவுரைகள் என்பன இக்கலாசாலைகளில் ஒழுங்கு செய்யவும் ஆவண செய்யப்படல்; வேண்டும்.
மேலும் வெறும் கோட்பாட்டு ரீதியாக மாத்திரம் இல்லாமல் நடைமுறையுடன் கூடியதாக இந்த சகவாழ்வு, சமூக நல்லிணக்கம் என்ற அம்சம் அரபுக் கலாசாலைகளில் போதிக்கப்பட வேண்டும். தனியானதொரு கலைத்திட்டத்தினூடாக இது இடம்பெற வேண்டும். அப்போது தான் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் காத்pதிரமான ஒரு பங்களிப்பை எமது அரபுக் கலாசாலைகளினால் வழங்க முடியும்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்)
Created On: Sunday, 07 April 2013 17:35
இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இயக்கம்
இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (ஹி.661728, கி.பி. 12631327) இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பேராற்றலும் செயற்திறனும் (னுலயெஅiஉ) பின் விளைவுச் செறிவும் (ளுநஅiயெட) பெற்ற மனிதர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றார்.
இவர் பிறந்த காலம் இஸ்லாமிய உலகைப் பொறுத்த வரை தொயின்பியின் வார்த்தையில் குறிப்பிடுவதாயின் (ளுஉhளைஅ ழுக வுhந டீழனல Pழடவைiஉ) அரசுச் சமுதாயம் சின்னாபின்னப்பட்டிருந்த ஒரு காலமாகும்.
இமாம் இப்னு தைமிய்யாவின் காலம் சில விடயங்களில் இமாம் அஹ்மதின் காலத்தை ஒத்திருந்தது. ஆயினும், இமாம் அஹ்மதின் காலத்தைப் போலன்றி இவர் காலத்தில் அறிவியல் இயக்கம் தேக்க நிலையை அடைந்திருந்தது.
பிக்ஹுத் துறையானது மாசடைந்து அதன் தூய்மையை இழந்திருந்தது. முன்னைய இமாம்களதும் அவர்களின் மாணவர்களினதும் ஆக்கங்களை மனனமிட்டுப் பதிய வைத்துக் கொள்வதே சமூக முதன்மையைப் பெறுவதற்குரிய ஒரு தகைமையாகக் கருதப்பட்டது. அத்துடன் புதிய பிரச்சினைகளின் தீர்வுக்கு சட்ட மூலாதாரங்களை ஆதாரங்களாகக் குறித்துக் காட்டும் மரபு நீங்கி இமாம்களின் நூல்களையும் பத்வாக்களையும் ஆதாரமாகக் காட்டும் புதிய மரபு ஒன்றும் உருவாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து குறித்த ஓர் இமாமை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனைப் பாங்கும் வளர்ந்தது. இதன்வழி, குறித்த நான்கு இமாம்களுக்குப் பின் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டு விட்டது என்ற கருத்தோட்டமும் வலுப் பெற்றது. சுய சிந்தனாவழி, இஜ்திஹாத் என்பன புறக்கணிக்கப்பட்டு, மத்ஹபுகளை, அதன் இமாம்களை ஆராய்வின்றிப் பின்பற்றும் பண்பு வளர்ச்சி கண்டது. இப்பண்பே தக்லீத் எனப்படுகின்றது.
அறிவியல் ரீதியாகவும் இருவரது காலமும் வேறுபட்டு அமைந்தன. இமாம் அஹ்மதின் காலத்திலோ அப்பாஸிய கிலாபத் சில கலீபாக்கள் முஃதஸிலாக் கொள்கைச் சார்புடையோராக இருந்தபோதிலும் பலமிக்கதாகக் காணப்பட்டது. ஆனால், இப்னு தைமிய்யாவின் காலத்தில் இந்நிலை இருக்கவில்லை. அப்பாஸிய கிலாபத்தின் ஸ்திரநிலை குன்றியிருந்தது. அவர்களிடமிருந்த ஆட்சி, அதிகாரம், பொருளாதார வளம் என்பவற்றை முஸ்லிம் சிற்றரசுகள் அபகரித்திருந்தன.
ஆன்மிகத் தலைவர் என்ற நிலையில் மட்டுமே கலீபாவை சிற்றரசர்கள் அங்கீகரித்திருந்தனர். முஸ்லிம் ஸ்பெய்ன் அமீர்கள் அப்பாஸிய கலீபாவை ஆன்மிகத் தலைவராகவும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்கள் தம் சுயமான ஆட்சியைக் கொண்டு நடத்தினர். இவ்வாறு அப்பாஸிய கிலாபத் ஐக்கியம் குறைந்து பலமிழந்து இருந்தபோது மேற்கேயிருந்து மேற்கொள்ளப்பட்ட சிலுவைப் படையெடுப்பினாலும் கிழக்கேயிருந்து வந்த மங்கோலியப் படையெடுப்பினாலும் இஸ்லாமிய அரசு மேலும் பலவீனமுற்றது.
இமாம் அஹ்மதின் காலம் முதல் முஸ்லிம் சமூகத்தினுள் செல்வாக்குச் செலுத்திய கிரேக்க, பாரசீக சிந்தனைகள் இமாம் இப்னு தைமிய்யாவின் காலத்தில் மேலும் வலுவடைந்தன. அவற்றினால் தோன்றிய சிந்தனா ரீதியிலான முரண்பாடுகள் மேலும் வளர்ச்சியடைந்தன. அரசியல் ரிதியாகத் தோன்றிய ஷீஆக்கள் இக்காலத்தில் சிந்தனா ரீதியான இயக்கமாக வளர்ச்சி கண்டனர்.
சுருக்கமாகச் சொல்வதாயின், இப்னு தைமிய்யாவின் காலம் என்பது முஸ்லிம் சமூகத்தின் அகீதா உயிரோட்டம் இழந்தும் நடத்தைகளில் ஊழல் மலிந்தும் தீமைகள் பரவியும் சிந்தனை தேக்கமடைந்தும் இஜ்திஹாத் செயல் இழந்தும் மக்கள் கருத்து முரண்பட்டு பல குழுக்களாகப் பிளவுபட்டும் இருந்த ஒரு காலமாகும்.
மஜ்லிஸ் ஷூரா - இன்றைய பிரச்சினைகளும் தீர்வுகளும்
Created On: Sunday, 24 March 2013 09:59

Page 36 of 64
<< Start < Prev 31 32 33 34 35 36 37 38 39 40 Next > End >>

