Sheikhagar.org - Official site for sheikhagar
புத்தாண்டுச் செய்தி
Created On: Monday, 29 December 2008 13:36

முஹர்ரம் புத்தாண்டு பிறந்துள்ளது. ஹிஜ்ரி 1429 கழிந்து 1430 துவங்கியுள்ளது. முஸ்லிம் உம்மத்தின் அவலங்களின் பட்டியல் நீண்டு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் புத்தாண்டு வருகை தந்துள்ளது. ஆனால் இவை அனைத்தையும் விட கவலைக்குரிய விடயம் யாதெனில் முஹர்ரம் புதுவருடப் பிறப்பைப் பற்றியோ முஸ்லிம் உம்மத்தின் அவலங்கள் பற்றியோ எத்தகைய பிரக்ஞையுமின்றி எம் சமூகம் இருப்பதுதான்.
கடன் அட்டை (Credit Card) பாவனை - பொருளியல் பார்வையும் ஷரீஆ நோக்கும்
Created On: Monday, 29 December 2008 14:10
வட்டியை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகப் பொருளாதாரம் எந்தளவுதூரம் உலக மக்களின் பொருளாதார வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வட்டி பூச்சிய நிலைக்குச் செல்லாதவரை உலகப் பொருளாதாரம் சீர்பெற முடியாது என்பது பொருளியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகும். அதாவது வட்டி அமைப்பு முற்றாக ஒழிக்கப்படுவதன் ஊடாகவே உலகில் ஆரோக்கியமான ஒரு பொருளாதார ஒழுங்கு உருவாக முடியும் என்பதே உண்மையாகும். ஒரு பொருளியல் அறிஞர் வட்டியை 'வாழ்வின் எய்டஸ் என வர்ணித்துள்ளார். வட்டியானது பொருளாதாரம் எனும் உடலின் பலத்தைக் குன்றச் செய்து அழித்துவிடும் எய்ட்ஸாகவே இருக்கிறது. இதனையே அல்குர்ஆன், 'அல்லாஹ் வட்டியை அழிக்கிறான் எனக் கூறுகிறது.
வட்டி என்பது ஒரு வகையில் நவீன காலனித்துவமாகும். கடனின் கோரப் பிடியில் எவ்வாறு மூன்றாம் உலக நாடுகள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் நாளை பிறக்க இருக்கும் குழந்தையும் கூட பெருந்தொகைக் கடனுடன்தான் பிறக்கிறது. இதற்கு நமது நாடும் விதிவிலக்கல்ல. பல நாடுகளால் செல்வந்த நாடுகளினதும், உலக நிதி நிறுவனங்களினதும் கடன்களை அடைக்க முடிவதில்லை. வருடா வருடம் குட்டிபோடும் வட்டியைக் கட்டுவதே இந்த நாடுகளுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. பழைய கடனை அடைப்பதற்கே பல நாடுகள் புதிய கடன் வாங்கும் அவலமும் உலகில் தொடர்கிறது. சிலபோது புதிதாகப் பெற்ற கடனால் பழைய கடனை அடைக்க முடிவதில்லை. மாறாக, அதற்கான வட்டியைச் செலுத்துவதில் குறித்த தொகை தீர்ந்து விடுகிறது. உதவி என்ற பெயரில் வழங்கும் இத்தகைய கடன்கள் மூலமே மூன்றாம் உலக நாடுகளில் செல்வந்த நாடுகளின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது. அவர்களின் விருப்பு வெறுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறுதான் வட்டி அமைப்பானது கலியுக காலனித்துவத்திற்கு வழியமைத்துக் கொடுக்கிறது.
இலங்கையில் இகாமத்துத் தீன் பணி
Created On: Tuesday, 30 December 2008 16:19
கேள்வி: இஸ்லாம் ஏனைய மதங்களைப் போல தனி மனித விவகாரங்களில் மாத்திரம் கவனத்தைக் குவிக்காது சமூகத்தை உருவாக்குகின்ற பணியையே வரலாறு நெடுகிலும் மேற்கொண்டு வந்துள்ளது. இது பற்றி விரிவாகக் கூற முடியுமா?
பதில்: பொதுவாக மதம் தனிமனிதன் பற்றியும் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவாக அலசும். ஆன்மிகம் குறித்து விரிவாகப் பேசுவதுதான் மதம் என்று பொதுவாக மதம் என்பதற்கு வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. அதுதான் யதார்த்தமும்கூட.
இந்த வகையில் இஸ்லாமும் ஒரு மதமாக இருக்குமென்றால் தனிமனித வாழ்க்கையை மாத்திரம் கவனத்திற்கொண்டு செயற்படுவதாகவே அமைதல் வேண்டும். ஆனால் இஸ்லாம் இத்தகைய ஒரு மதமல்ல. இஸ்லாத்தை மதம் என்று அழைக்க முடியாது. ஏனெனில் பொதுவாக மதத்துக்கு வழங்கப்படுகின்ற வரைவிலக்கணத்துக்கு மாற்றமாக இஸ்லாத்தில் மூன்று பெரும் இலக்குகள் உண்டு அவை:
தனி மனித உருவாக்கம்
குடும்ப உருவாக்கம்
சமூக உருவாக்கம்
தனிமனிதர்களை உருவாக்கி தனி மனிதர்களைக் கொண்ட சில குடும்பங்களை அமைத்து, குடும்பங்களை இணைத்த ஒரு சமுதாயத்தை தோற்றுவிப்பதுதான் இஸ்லாத்தின் இலக்கு.
சிரமம் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்
Created On: Monday, 29 December 2008 16:51
சிரமம் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்
ஹலால் ஹராம் சட்டவிதிகள் - 07
இந்த விதியின் அடிப்படையில்தான் சிரமம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஷரீஅத் 'ருக்ஸத்' என்ற சலுகைகளை முஃமீன்களுக்கு வழங்குகின்றது. இச்சலுகைகள் இஸ்லாம் மனிதனைச் சிரமப்படுத்த விரும்புவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
பிரயாணம் என்பது ஒரு சிரமமான காரியம் என இஸ்லாம் கருதுகின்றது. எனவே பிரயாணிக்கு பல விஷேட சலுகைகளை வழங்குகின்றது. உதாரணமாக ஐங்காலத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கும் சேர்த்துத் தொழுவதற்கும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றாமல் இருப்பதற்கும், நோன்பை விடுவதற்கும் பிரயாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Page 64 of 64
<< Start < Prev 61 62 63 64 Next > End >>
