Sheikhagar.org - Official site for sheikhagar
குணத்தின் குன்று, ஸீரதுன் நபி. ( அன்பு) - ep2
Created On: Saturday, 19 December 2015 07:04
குணத்தின் குன்று, ஸீரதுன் நபி. (பணிவு) - ep1
Created On: Saturday, 19 December 2015 06:57
ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் புள்ளியில்தான் கட்டுக்கோப்பானதொரு சமூகம் மலரும்!
Created On: Saturday, 28 November 2015 18:30

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களுடனான அல்ஹஸனாத் சஞ்சிகையின் நேர்காணல்
அல்ஹஸனாத்: ஒரு கட்டுக்கோப்பான சமூக உருவாக்கம் இஸ்லாத்தில் எந்தளவு தூரம் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து சுருக்கமாகக் கூற முடியுமா?
அஷ்ஷெய்க் அகார்: பொதுவாக மதம் தனிமனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான உறவு பற்றியே பேசுகிறது. அதற்கு அப்பால் செல்வதில்லை. ஆனால், இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற அம்சங்களை இலக்காகக் கொண்டது. எனவே, இஸ்லாத்தை ஒரு மதம் என்று அழைக்கலாகாது. அப்படிச் சொல்வதாயின் அதனோடு சேர்த்து குடும்ப சார்ந்த (Family Oriented) சமூக மைய (Community Oriented) ஆகிய இரு அடைமொழி களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தன்வழி தனி மனிதர்களை உருவாக்குதல், தன்வழி குடும்பங்களை உருவாக்குதல், அந்த குடும்பங்களை இணைத்த ஒரு கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்குதல் இஸ்லாத்தின் மிக முக்கியமான இலக்குகள் ஆகும். இஸ்லாத் தின் அடிப்படை மார்க்கக் கடமைகள் மற்றும் இபாதத்துக் களை ஆராய்கின்றபோது இந்த உண்மையை தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும். கூட்டுத் தொழுகை, நோன்பு, கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றப்படும் ஸகாத், கூட்டாக இணைந்து நிறைவேற்றும் ஹஜ் கிரியைகள்... என அனைத்தும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்து நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் ஆகும்.
பொதுவாக வேத நூல்கள் தனி மனிதனை விளித்துப் பேசுகின்றன. ஆனால், அல்குர்ஆன் மிகப் பெரும்பாலும் பன்மையில் விளித்துப் பேசுவதையும் சமூகத்தை விளித்துப் பேசுவதையும் பார்க்கலாம். தொழுகையை நிலைநாட்டுங் கள்... ஸகாத்தை நிறைவேற்றுங்கள்... முதலான கட்டளைகள் முழு சமூகத்தையும் நோக்கி விளிக்கின்றமையை பார்க்கிறோம்.
சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பணி!
Created On: Monday, 05 October 2015 18:30

ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் விரிவுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
ஒக்டோபர் 06 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல புனிதமான பணி
கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு புனிதமான பணி நபிமார்களின் பணி. நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்கள் தன்னை அறிமுகப் படுத்தும்போது கூறினார்கள்:
“நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்.”
அல்லாஹுத் தஆலா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அறிமுகப்படுத்தும் போது, “மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர் கற்றுக் கொடுப்பவர்” (அல்ஜுமுஆ: 2) என்று அறிமுகப்படுத்துகின்றான்.
உலகத்தில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஆசான்களாகத் திகழ்ந்தனர். அத்தகைய இறைத் தூதர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள்தான் ஆசிரியர்கள். இவ்வாறு ஆசான்களாக வந்த இறைத்தூதர்கள் இரண்டு செய்திகளைச் சொன்னார்கள்.
01. அல்லாஹ்வுக்கு மாத்திரம் இபாதத் செய்யுங்கள். அவனைத் தவிர வணங்கி வழிபடுவதற்கு வேறு இலாஹ் இல்லை. அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுங்கள்.
02. இந்தப் போதனையைப் புரிவதற்காக எங்களுக்கு எந்தவோர் ஊதியத்தையோ சம்பளத்தையோ கூலியையோ உங்களிடம் நாம் கேட்கவில்லை. நாம் உங்களுக்கு கற்பிக்கிறோம். சத்தியத்தை எடுத்துச் சொல்கிறோம். சரி, பிழையை பிரித்துக் காட் டுகிறோம். இதற்கான கூலியை உங்களிடம் நாம் எதிர்பார்க்கவில்லை. இதற்கான கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது.
கற்பித்தல் மாத்திரமல்ல, வேறு எந்தத் தொழிலாக இருந்தாலும் வெறும் பணத்திற்காக மாத்திரம் தொழில் புரியக் கூடாது. தொழில், உழைப்பு என்பது பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழியேயன்றி அதுதான் எமது இலட்சியம் அல்ல. எமது இலட்சியம் சுவனமும் இறைதிருப்தியுமே ஆகும். மக்களுக்கு சேவை செய்கின்ற அவர்களாகவும் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாகவும் பணியாற்ற வேண்டும். எமது வாழ்வாதாரத்திற்காக நாம் செய்யும் அந்த சேவைக்கு சிறிது ஊதியம் எதிர் பார்க்கின்றோம் என்ற மனோநிலையில்தான் நாம் உழைப்பில் ஈடுபட வேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்களுக்கு நல்ல விடயங்களை சொல்லிக் கொடுப்பவர்களுக்கு மலக்குகள் எந்நேரமும் துஆ செய்து கொண்டிருக்கின்றனர்.”
நல்ல விடயங்களைக் கற்றுக் கொடுப்பது என்பதன் அர்த்தம், இஸ்லாத்தைக் கற்பிப்பது மாத்திரமல்ல. புவியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏனைய விடயங்களைக் கற்பிப்பதும் நல்ல விடயங்கள்தான். அதனை முறையாக கற்பித்தால் அவர்களுக்கு அல்லாஹ்வின் கூலி கிடைக்கும். செய்யும் தொழிலுக்கூடாக சுவனம் செல்ல வேண்டுமென்றால் இந்தப் பார்வை அவசியம். ஏனெனில், செய்யும் தொழில் அமானத் ஆகும். ஓர் ஆசிரியர் மாத்திரமல்ல, எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் தொழில் ஓர் அமானத் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும்......
நடுநிலைக் கொள்கையும் சமநிலைச் சமூகமும்!
Created On: Friday, 02 October 2015 09:46

கடந்த 24.07.2015 அன்று கொள்ளுப்பிட்டி ஜுமுஆப் பள்ளிவாசலில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தின் சாராம்சத்தை காலத்தின் தேவை கருதி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
-----------------------------------------
அல்லாஹுத் தஆலா இஸ்லாத்தை ஏற்று வாழ்கின்ற மிகப் பெரும் பாக்கியத்தை எமக்கு வழங்கியிருக்கின்றான். அல்லாஹ் எம்மீது சொரிந் திருக்கின்ற அருட்கொடைகளிலேயே மிகப் பெரும் அருள், நாம் சத்திய இஸ்லாத்தின் தூதைச் சுமந்திருப்பதாகும்.
இஸ்லாம் தனக்கேயுரிய பல தனித்துப் பண்புகளை, சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது. உலகத்தில் எந்தவொரு கொள்கைக்கும் இல்லாத சிறப்புகளும் தனித்துவமான பண்புகளும் இஸ்லாத்துக்கு இருக்கிறது. அந்த வகையில், தீனுல் இஸ்லாத்திற்கே உரிய ஒரு சிறப்பு பண்புதான் ரப்பானிய்யா என்ற பண்பு. இந்த மார்க்கம் தெய்வீகமானது இறைவ னிடமிருந்து மனிதர்களுக்கு கிடைக்கப் பெற்றது என்ற வகையில் இது ரப்பானி. இது மனிதர்களை இறுதியாக இறைவனிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் என்ற வகையிலும் இது ரப்பானி. அதாவது, இதன் ஆரம்பமும் ரப்பானி (ரப்பானியதுல் மஸ்தர்) இதன் முடிவும் ரப்பானி (ரப்பானியதுல் காயா) ஆகும்.
உலகத்தில் தோற்றம் பெற்ற கொள்கைகளும் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் இறைவனால் அருளப்பட்டவையல்ல. அவை அனைத் திலிருந்தும் இந்த தீன் ரப்பானி என்ற வகையில் வேறுபடுகிறது. மனிதர் கள் எவ்வளவு அறிவாற்றல் கொண்டவர்களாக இருந்தாலும் திறமை படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களது சிந்தனைகளில், அவர்கள் வகுக்கின்ற கொள்கைகளில் குறைகளும் கோளாறுகளும் இருக்கும். நாம் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம் ரப்பானியாக இருப்பதனால் இது குறையற்ற, குற்றங்களற்ற ஒரு மார்க்கமாக திகழ்கிறது. ஏனென்றால், முக்காலங்களையும் அறிந்த, எந்தக் குறையும் இல்லாத அல்லாஹ்வி னால் இந்த மார்க்கம் எமக்குத் தரப்பட்டிருக்கிறது. இது இந்த மார்க் கத்தின் தனிப் பெரும் சிறப்பம்சம்.
இஸ்லாத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், இது ஒரு நிலையான மார்க்கம். இது ஒருபோதும் காலாவதியாகாது. இவ்வுலகில் கடந்த 1,500 வருடங்களுக்குள் பல்வேறு சித்தாந் தங்கள் தோன்றி மறைந்துள்ளன. எத்தனை யோ கொள்கை, கோட்பாடுகள் வீச்சுடன் வளர்ந்து அதனைவிட வேகமாக செல் வாக்கு இழந்துள்ளதை நாம் பார்க்கின்றோம். ஆனால், அல்லாஹ்வின் இந்த தீன் யுக முடிவு வரை நிலைத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அல்லாஹ் அதற்கான உத்தரவாதத்தையும் அளித்தி ருக்கின்றான்.
”இந்த தீனை நாமே இறக்கினோம். அதனை (இறுதி வரை) நாமே பாதுகாப் போம்.”
Page 15 of 64
<< Start < Prev 11 12 13 14 15 16 17 18 19 20 Next > End >>
