Sheikhagar.org - Official site for sheikhagar
ரமழான் சிந்தனை - ரமழானின் இறுதிப் பத்து நாட்கள்
Created On: Saturday, 19 July 2014 18:38

மரணம் முற்றுப்புள்ளியல்ல...
Created On: Sunday, 13 July 2014 19:05

அல்லாஹ் மனிதர்களுக்கு இரண்டு உபதேசிகளை வழங்கியிருக்கின்றான்
- பேசுகின்ற உபதேசி
- மௌன உபதேசி
இவை என்றும் எப்போதும் எம்மோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற இரண்டு பெரும் உபதேசிகள். வேறு எந்த உபதேசங்களும் அவசியப்படாத அளவுக்கு இவ்விரு உபதேசிகளும் எமது வாழ்வை சீரமைக்கப் போதுமானவை. பேசுகின்ற உபதேசிதான் புனித அல்குர்ஆன். இது எம்மோடு பேசிப் பேசி எமக்கு எப்போதும் உபதேசம் செய்து கொண்டேயிருக்கிறது. பேசாமலேயே எமக்கு உபதேசம் செய்கின்ற அடுத்த மௌன உபதேசிதான் மரணம்.
மனிதன் மரணத்தை நினைத்துப் பார்க்கின்ற அளவுக்கு அவன் அதன் மூலம் நல்லுணர்ச்சி பெறுவான். மனிதனுக்கு மரணம் ஒன்றே போதுமான உபதேசியாக இருக்கிறது.
ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “எவ்வாறு இரும்பு துருப்பிடிக்கிறதோ அதேபோல உள்ளங்களும் துருப்பிடிக்கின்றன” என்று சொன்னபோது “உள்ளத்திலே படியக்கூடிய துருவைப் போக்க என்ன செய்யலாம் அல்லாஹ்வின் தூதரே?” என ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று அல்குர்ஆனை ஓதுவது (திலாவதுல் குர்ஆன்). இரண்டாவது மரணத்தை நினைவுபடுத்துவது (திக்ருல் மௌத்)” எனக் கூறினார்கள்.
உள்ளத்தில் படியும் துருவைப் போக்க, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, பக்குவப்படுத்தி, பண்படுத்தி மனிதன் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டுமோ அந்த இலக்கை நோக்கி அவனை வழிநடத்த இந்த இரண்டு உபதேசி களும் போதுமானவை என்ற கருத்தை நபியவர்கள் இங்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ரமழானும் அல்குர்ஆன் மீதான கடமைகளும்
Created On: Saturday, 05 July 2014 18:04

மனித சமுதாயத்தை இருளில் இருந்து விடுவித்து ஒளியின் பால் வழிகாட்ட வந்த இறைமறை அல்குர்ஆன் அல்உஷ்ருல் அவாகிர் என அழைக்கப்படுகின்ற ரமழானின் கடைசிப் பத்திலுள்ள ஓர் இரவிலேயே இறக்கியருளப்பட்டது.
ரமழான் மாதத்தில் அல்லாஹ்வின் கலாமான அல்குர்ஆன் இறக்கியருளப் பட்டதன் காரணமாகவே ரமழான் மாதம் சிறப்புப் பெறுகிறது. அல்குர்ஆனில் இந்த மாதத்தைப் பற்றி வர்ணிக்கும்போது அல்லாஹ்,
“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமை யான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது” (ஸூரதுல் பகரா: 185) எனவும்
“நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்” (ஸூரதுல் கத்ர்: 01) எனவும் குறிப்பிடுகின்றான்.
எனவே, ரமழான் மாதம் அது குர்ஆனின் மாதம் அல்லாஹ்வின் வழிகாட் டல்கள் மனித சமூகத்திற்கு இறக்கியருளப்பட்ட மாதம். அதற்கு நன்றி சொல்லும் வகையிலேயே இந்த மாதம் முழுவதும் நாம் பசித்திருக்கிறோம் தாகித்திருக்கிறோம் இரவெல்லாம் நின்று வணங்குகின்றோம்.
உள்ளங்களை உசுப்பிய அல்குர்ஆன்
அல்குர்ஆன் இறக்கியருள்ளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் இந்த உலகில் எத்தகைய பெரும் புரட்சிகளைச் செய்தது, அது நிகழ்த்திய சாதனைகள் என்ன, மனித உள்ளங்களில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தகையவை? என்பதையல்லாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை உருவிய வாளோடு படுகொலை செய்யவந்த உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை இஸ்லாத்தின், நபிவர்களின் பாதுகாவலனாக மாற்றிய பெருமை அல்குர்ஆனைச் சாரும். ஆல்குர்ஆனின் ஓர் இரண்டு வசனங்கள் உமர் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களின் உள்ளத்தில் அதிர்வை, தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தியது. ஈற்றில் அவர் மனிதப் புனிதனாக மாறுகின்றார்.
பக்தாதில் அன்று மிகவும் பேர் போன ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரராக இருந்த புழைல் இப்னு இயாழ் என்பவர் ஹரம் ஷரீபுடைய இமாமாக மாறினார் என்றால், அதற்குக் காரணம் ஓர் அல்குர்ஆனிய வசனம்தான்.
“ஈமான் கொண்டவர்களே! அவர்களுக்கு அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ் வையும் இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா?” (ஸூரதுல் ஹதீத்: 16) என்ற அல்குர்ஆன் வசனம் ஏற்படுத்திய அதிர்வு புழைல் இப்னு இயாழுடைய முழு வாழ்வையுமே மாற்றியமைத்தது.
அதே அல்குர்ஆனைத்தான் நாமும் அணுதினமும் மீட்டி மீட்டி ஓதுகிறோம் பாராயணம் செய்கிறோம். அல்குர்ஆன் உமர் இப்னு கத்தாப் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய அதிர்வை எம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கிறதா? புழைல் இப்னு இயாழ் (ரஹிமஹுல் லாஹ்) போன்ற ஆயிரமாயிரம் உள்ளங்களை உசுப்பிய இந்த அல்குர்ஆன் எமது உள்ளத்தில் மாற்றத்தை, தாக்கத்தை செலுத்தியிருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
ஆரம்ப கால ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், ஸலபுகள் அல்குர்ஆனின் மூலமாக அற்புதமான வழிகாட்டல்களைப் பெற்றார்கள். அதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் போக்கையே மாற்றிக் கொண்டார்கள். அந்த மாற்றம் எங்களிடம் வர வேண்டும் என்றிருந்தால், நாம் அல்குர்ஆனை அணுகும் முறையில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
பிரார்த்தனை: முஸ்லிமின் ஆயுதம்
Created On: Friday, 13 June 2014 20:17

எமது ஆன்மிக வாழ்வில் எழக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. அந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பாத எந்தவொரு இறை விசுவாசியும் இல்லை என்று சொல்லுமளவுக்கு அது சகலரையும் ஆட் கொண்டிருக்கிறது. அதுதான் எமது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது ஏன்? என்ற பிரச்சினைக்குரிய கேள்வி.
ஹஜ்ஜில் புனித அரபா வெளியில் நின்ற வண்ணம் கேட்கும் பிரார்த்த னைகள், ரமழானில் குறிப்பாக, கடைசிப் பத்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனைகள், கியாமுல் லைல், தஹஜ்ஜுத் தொழுகைகளின்போதான பிரார்த்தனைகள்... என்று பல நாளாந்த வாழ்வில் பல்வேறு துஆக்களை கேட் கின்றோம். ஆனால், இவற்றுள் எத்தனை பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக் கின்றன என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது.
பொதுவாக பிரார்த்தனைகள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவை நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரார்த்திக் கின்றபோதுதான் எமது துஆக்களுக்கு பெறுமானம் கிடைக்கிறது. மறுபக்கத்தில் எமது பிரார்த்தனைகள் எப்போது, எவ்வாறு, எந்த அமைப்பில் அங்கீ கரிக்கப்பட வேண்டும் என்பதனை அல்லாஹ்வே தீர்மானிக்கின்றான் என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Page 27 of 64
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>

